செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மம்தா - மாவோயிஸ்ட் மோதல் : வளர்த்த கடா மார்பில் பாயுதோ..?

மாவோயிஸ்ட்கள் என்னை கொலை செய்ய முயற்சி : மம்தா அலறல் 
                 மாவோயிஸ்டுகள் என்னையும், மத்திய அமைச்சர் முகுல் ராய் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கொலை செய்ய  முயற்சி செய்கின்றனர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென அலறியுள்ளார். சமீபத்தில்  மூன்று திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீது மம்தா கொபமடைந்திருக்கிறார்.
                 கொலையும் பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடத்த முடியாது.  இரண்டில் எது  வேண்டும் என்பதை மாவோயிஸ்டுகளே முடிவு செய்யட்டும் என்றும், அரசு செய்யும் வளர்ச்சிப் பணிகளில் மாவோயிஸ்ட்கள் தலையிடக்கூடாது என்றும் மாவோயிஸ்ட்கள் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார்.
                  தன்னுடைய கட்சித் தொண்டர்களை கொன்றதன் மூலம் மனித உரிமையைப் பற்றி பேசுவதற்கு மாவோயிஸ்ட்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் மாவோயிஸ்ட்களை கடித்து கொதறியிருக்கிறார்.
                 மாவோயிஸ்ட்களுக்கு வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் நிதியுதவி செய்யப்படுகிறது என்பதை இப்போது தான் ஒப்புக்கொண்டு புலம்புகிறார்.
                 மேற்கு வங்கத்தில் கடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராக வளர்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இன்று தனக்கு எதிராக திரும்புவார்கள் என்று மம்தா எதிர்பார்க்கவில்லை. வளர்த்த கடா மார்பில் பாய்வதால் இன்று பதறுகிறார். 

கருத்துகள் இல்லை: