வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

''மூளைச்சாவு'' என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காக செய்யப்படும் உயிர் கொலை...!

        
            அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால், அவருக்கு ''மூளைச்சாவு''  ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி உயிரோடு இருக்கும் அவரை அறுத்து, அவரது உடலில் நல்லவிதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்றவற்றை அப்படியே வெளியே எடுத்து அதன் இயக்கம் அடங்குவதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள், வேகமாக  அந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டு அவர்களை உயிர்பிழைக்கச் செய்கிறார்கள். மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரை இப்படியாக சாகடித்து குறைந்தது ஐந்து பேரையாவது  உயிர்பிழைக்கச் செய்கிறார்கள். 
            இது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ''உயிர் கொலை'' என்று தான் சொல்லவேண்டும். இதை சட்டமும், அரசாங்கமும் எப்படி அனுமதிக்கிறது என்று தான் புரியவில்லை. உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிர்வாழ முடியாதவர்களுக்கு  கூட ''கருணை கொலைக்கே'' அனுமதியளிக்காத சட்டம் இந்த உயிர் கொலையை எப்படி வேடிக்கைப்பார்க்கிறது என்று தான் புரியவில்லை. மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கு இதயம் இயங்கும், மூச்சுக்காற்று உள்ளே போய் வெளியே வரும், இரத்த ஓட்டம் இருக்கும், நாடி துடிப்பு இருக்கும், சிறுநீரகங்களும் அதன் வேலையை செய்துகொண்டுதான் இருக்கும், வயிறு உணவு கேட்கும், அதுமட்டுமல்ல மருத்துவர்களால் மூளை இறந்து விட்டதாக சொல்லப்படும் மூளை கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் எந்தவித சலனமும் அசைவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருப்பார். உயிரோடு தான் இருப்பார். அப்படி உயிரோடு இருப்பவர்களை அறுத்து இயங்கிக்கொண்டிருக்கும் உடலுறுப்புகளை எடுத்து ஒருவரை சாகடிப்பது என்பது எந்தவகையில் நியாயமாகும். பல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகம் திருடுவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்று தான். மூளை இறந்துவிட்டால் மேலே சொன்ன அத்தனை இயக்கமும் நின்றுவிடும். அதனால் இது மூளைச்சாவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                ஒன்றும் அறியாத அப்பாவிகள் தான் இதில் பெரும்பாலும் பலியாகிறார்கள். அறிவியல் மற்றும் மருத்துவம் அதீதமாக வளர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் தலையில் அடிப்பட்டு கோமா நிலைக்கு போனவர்களை இந்த மருத்துவத்தால் காப்பாற்றமுடியாதா...? நிச்சயம் முடியும். அதற்கு காலதாமதம் ஆகலாம். நேரமும் பணமும் செலவாகலாம். அதுவரையில் அவர் உயிரோடு தான் இருப்பார். நிச்சயமாக ஒரு நாள் எழுந்து நடமாடுவார். ஆனால் அதுவரையில் காத்திராமல், தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை ''மூளைச்சலவை'' செய்துவிடுகிறார்கள். கோமாவில் இருப்பவர் எழுந்து நடமாட வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை அல்லது எழுந்து நடமாட அதிக காலம் பிடிக்கும், அதற்கு அதிக செலவாகும், அதற்கு மாதங்களாகலாம், வருஷங்களாகலாம் அல்லது எழுந்திருக்காமல் கூட போய் இறந்து விடலாம் என்றெல்லாம் குழப்பி உடலுறுப்பு தானத்திற்கு சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.
                 சரி... இந்த உடலுறுப்புகளை அந்த அப்பாவிகளிடமிருந்து தானமாக பெறுகிறார்களே தவிர, உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதில்லை. அந்த மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பல இலட்சங்களை பெறுகிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சை என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போதே, நகரம் முழுதும் உள்ள மற்ற எல்லா மருத்துவமனைகளிலும், அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடமும் உடனடியாக பதியப்படுகிறது. சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்து வருபவர்களை அவர்களுக்கு மருத்துவம் செய்து நடமாட வைப்பதற்கு பதிலாக, ''உடலுறுப்புதானம்'' என்ற பெயரில் உயிர் கொலை செய்துவிடுகிறார்கள்.
              இனியாவது அரசாங்கமும், சட்டத்துறையும், பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற உயிர்கொலையை விசாரிக்க வேண்டும். மேலும் நடக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும்.

2 கருத்துகள்:

Radha N சொன்னது…

நீங்கள் சொல்வது நிச்சயம் உண்மைதான்....மூளை தன் இயக்கத்தை நிறுத்தினால் உடனடியாக எல்லா உறுப்புகளும் தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் தானே....

அக்குஹீலர்.ர.கார்த்திகேயன் சொன்னது…

தாங்கள் பதிவுகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் :)