ஞாயிறு, 16 மார்ச், 2014

தோல்வி பயத்தில் தன் மாநிலத்தை விட்டே ஓடும் கோழை நரேந்திர மோடி...!

              
            பாராளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே பாரதீய ஜனதாக் கட்சியின் ''பிரதமர் கனவு வேட்பாளராக'' மோடி அறிவிக்கப்பட்டவுடனேயே  மோடி தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்றும்,   நாடு முழுதும் ''மோடி அலை'' தான் வீசுகிறது என்றும் பாஜாக-வினரும், ஊடகங்களும் பிரச்சாரத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். குஜராத் மாநிலத்தில்  பல்வேறு துறைகளில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்த  மோடியால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லமுடியும் என்றெல்லாம்  கடந்த ஓராண்டு காலமாக நாடுமுழுதும்  பல கோடிகளை செலவழித்து பிரச்சாரம் செய்துவந்தனர்.
            ஆனால் ''பிரதமர் கனவு வேட்பாளராக'' அறிவிக்கப்பட்ட மோடி போட்டியிடப்போகும் தொகுதியை மட்டும் சொல்லப்படாமலேயே இருந்தது. காரணம் மோடியின் பார்வை உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியின் மீது தான் இருந்தது. ஏற்கனவே ''அமைதிப்படை அமாவாசை'' பாணியில் பிரதமர் கனவில் மிதந்த அத்வானியை கவிழ்த்தது போல், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாரணாசி பாராளுமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.பி-யான பாரதீய ஜனதாக் கட்சியை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியை கவிழ்த்துவிட்டு அந்த தொகுதியை தான் போட்டியிட கைப்பற்றிக்கொண்டார். அந்த தொகுதியை மோடிக்கென்று அறிவிக்கும் வரையில் இழுபறியாகவே இருந்தது. இப்போது ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
            நமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால்...? ஒரு மாநில முதல்வர் தான் தேர்தலில் போட்டிப்போட தன் சொந்த மாநிலத்தில் அவருக்கான தொகுதியை தேடுவது தானே முறையாக இருக்கும். நியாயமாகவும் இருக்கும். ஆனால் மோடியோ தன் சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு வேற்று மாநிலத்தில் தனக்கான தொகுதியை தேடியது ஏன் என்பது தான் நமது கேள்வி...? 
             மோடியின் தலைமையிலான ஆட்சியால் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும்  கண்டுகொண்டிருக்கும் குஜராத் மக்கள் மோடிக்கு வாக்களிக்கமாட்டார்களா...? என்பது தான் நமது கேள்வி.
      மோடியின் திறமையான ஆட்சியினால் குஜராத்தில் தேனாறும், பாலாறும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாநில மக்கள் மோடிக்கு வாக்களிக்கமாட்டார்களா...? என்பது தான் நமது கேள்வி.
    விவசாயமும், கல்வியும், மின்சாரமும் ஒளிரும் ''குஜராத் மாடலை'' அனுபவித்துக்கொண்டிருக்கும் குஜராத் மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று மோடி முடிவு செய்துவிட்டாரா...? என்பது தான் நமது கேள்வி...?
            கடந்த 2002 - ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கெதிராக தாம் நிகழ்த்திய ''இனப்படுகொலையை'' மறந்திராத குஜராத் மக்கள் தனக்கெதிராக வாக்களித்துவிடுவார்கள் என்ற பயமா...? என்பது தான் நமது கேள்வி.
          அப்படி என்றால் ''குஜராத் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது'' என்று இதுவரையில் செய்தப்  பிரச்சாரம் பொய் என்பதை மோடி ஒப்புக்கொள்வாரா...?
                தேர்தல் தேதி அறிவித்தவுடன் மோடிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. குஜராத்தில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை மோடி புரிந்துவைத்திருக்கிறார். அதனால் தான் ''காவிச்சாயம்'' பூசிய ''பாதுகாப்பான'' தொகுதியை தேடி கண்டுபிடித்து தட்டிப் பறித்திருக்கிறார்.
               தோல்வி பயத்தில் தன்  சொந்த மாநிலத்தையே விட்டு ஓடும் கோழை தான் இந்த நரேந்திர மோடி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 

3 கருத்துகள்:

radhu சொன்னது…

வாரனாசியில் நிற்பது பயத்தினால் அல்ல உ.பி ல் அதிக வெற்றியை உறுதி செய்யவே.

Avargal Unmaigal சொன்னது…

மிக சரியாக சொல்லி இருக்கீங்க ராம்ஜி

Avargal Unmaigal சொன்னது…

ராம்ஜி உங்கள் தளத்தில் கருத்து இடும் போது வோர்டு வெரிபிகேஷன் வருது அதை நீக்குங்கள் அது இருந்தால் கருத்து இட நினைப்பவர்கள் கூட இடாமல் சென்று விடுவார்கள்