சனி, 26 ஜனவரி, 2013

புதுச்சேரியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தொடக்கம்...!





         நேற்று மாலை புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் துவக்கிவைக்கப்பட்டது. ''தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம். கல்வி தெரியாதப் பேர்களே இல்லாமல் செய்வோம்'' என்ற மக்கள் கவிஞனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தெருவெங்கும் கல்விக்கூடங்கள் கட்ட நமக்கு வசதியும் வாய்ப்பும் இல்லாவிட்டாலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுவை - தமிழகத்தில் 21 மாவட்டங்களில், தீண்டாமைக்கு எதிராக எழுந்த தீப்பந்தம் டாக்டர் அம்பேத்கர் பெயரில் ''கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம்'' துவக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் வழக்கமான சடங்குகளுக்கு மத்தியில், அவர் எந்த ஒரு சமூகத்திற்காக போராடினாரோ, அந்த சமூகத்தின் ஏற்றத்திற்கான இயக்கமாகவே  - ஒரு போராட்டமாகவே இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 10 - ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு படிக்கும் தலித் சமூக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறையிலும், மத்திய - மாநில அரசுத் துறைகளிலும் வெலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கு வேலை தேடும் தலித் சமூக இளைஞர்களை பயிற்சிகள் கொடுத்து தயார்படுத்தும் இந்த பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது.
           இந்த மையத்தை நேற்று மாலை புதுச்சேரி -  இலாசுபேட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மையக் கட்டிடத்தில் புதுச்சேரி மாநில நலத்துறை அமைச்சர் திரு. பி. ராஜவேலு துவக்கிவைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் திரு. எஸ். கே. பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் தோழர். வி. பெருமாள் மற்றும் பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். கே. கணேஷ் ஆகியோர் மையத்தை வாழ்த்திப் பேசினார்.
              இந்த மையம் எல். ஐ. சி முகவர்கள் சங்கம், எல். ஐ. சி. ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பி. எஸ். என். எல். ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம், சி. ஐ. டி. யூ ஆகிய ஊழியர் சங்கங்களின் ஒத்துழைப்புகளுடனும், நிதியுதவியுடனும் இந்த பயிற்சி மையம் நடத்தப்படவிருக்கிறது.  


























 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒங்க கொசுத்தொல்லை வர வர தாங்க முடியலடா

puduvairamji.blogspot.com சொன்னது…

பெயரை சொல்லாமல் கருத்தை வெளியிட்ட அந்த ''கோழை'' யார்...?