ஞாயிறு, 15 ஜனவரி, 2012

காமிரா கண்ணை மூடியது - காமிராவைத் தூக்கிய முதல் இந்திய பெண் புகைப்பட பத்திரிகையாளர்...!

   அஞ்சலி                                
                     தன்னுடைய 98 - ஆவது வயதில், முதல் இந்திய பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமாய் வ்யாரவாலா  இன்று காலை காலமானார். பத்திரிகைத் தொழிலுக்காக காமிராவை தூக்கிய முதல் இந்திய பெண்மணி ஆவார். 1938 - ஆம் ஆண்டில் காமிராவை எடுத்தவர் சுமார் 35 ஆண்டுகளாக 1973 - ஆம் ஆண்டுவரை தன் காமிரா மூலம் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இவர் எடுத்த அத்தனை  புகைப்படங்களும் அபூர்வமானவை. சுதந்திரப்போராட்டங்கள், 1947 ஆகஸ்ட் 15 - முதலாவது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள், மவுண்ட் பேட்டன் விடைபெறும் நிகழ்வு, காந்தி - நேரு - லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது இறுதி நிகழ்ச்சிகள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை இவரது காமிராவில் அடக்கியிருக்கிறார். இவருக்கு இந்திய அரசு பத்மா விபூஷன் விருதும் கொடுத்து கவுரவித்துயிருக்கிறது. மறைந்த அம்மையாருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
              
                இவர் எடுத்த பிரபலமான புகைப்படத்தில் ஒன்று  இன்றும் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. மறைந்த பிரதமர் நேரு பிரிட்டிஷ் ஹை - கமிஷனரின் மனைவியுடன் விமானத்தில் புதுடெல்லியிலிருந்து லண்டன் சென்றபோது எடுத்தப்படம். நேரு உடன் நெருங்கிய நட்புகொண்டவர் என்பதால் நேருவின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் எடுத்திருக்கிறார்.  கீழே உள்ள படங்களும் இவர் எடுத்ததே.

அன்றும்....
இன்றும்....             











                                                                                                                 
தன் சகோதரி விஜயலட்சுமியுடன் நேரு
ஜாக்குலின் கென்னடியுடன் நேரு 
                        


1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
மிக்க நன்றி.