திங்கள், 13 மே, 2013

பாகிஸ்தான் புதிய பிரதமரின் வரவேற்கத்தக்க மாற்றம்....!

          
         சென்ற சனிக்கிழமையன்று நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த நாளே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டதில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நம் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமாராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷரிப்க்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
        இதனை அடுத்து தனது பதவியேற்பு நிகழ்ச்ச்சியில் பங்கேற்கும்படி மன்மோகன்சிங்கிற்கு நவாஸ் ஷரிப் அழைப்பு விடுத்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல், மன்மோகன்சிங் பங்கேற்றால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்  என்று நவாஸ் ஷரிப் கூறியிருப்பது என்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
         இப்படியாக இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் நட்புப் பாராட்டியிருப்பது பாராட்டத்தக்க - வரவேற்கத்தக்க நிகழ்வுகளாகும். இந்த நட்பு எந்தவிதமான பாதகமில்லாமலும், விரிசல்களில்லாமலும் மேலும் மேலும் வளரவேண்டும் - உயர வேண்டும்.

கருத்துகள் இல்லை: