வியாழன், 23 பிப்ரவரி, 2012

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ் கொலை வெறியாட்டம்


உன் உதிரம் தந்து 
செங்கொடி  காத்து 
நீ... 
மண்ணில் வீழ்ந்தாயே ...
தோழா... 




                 நேற்று மேற்குவங்க மாநில பர்துவான் நகரின் தேவான்டிகி பகுதியில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரதீப் தா மற்றும்  கமல் கயேம் ஆகிய இருவரையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் படுகொலை செய்தனர் என்கிற  செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது. தோழர் பிரதீப் தா, சட்டமன்றத்தில் பர்துவான் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதிதத்துவப்  படுத்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
              மத்திய தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ள பிப்ரவரி 28 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்றைய தினம்  நடந்த ஊர்வலத்திற்கு இந்த இரண்டு தலைவர்களும் தலைமை தாங்கிச் சென்றபோது இந்த கொடூரமான கொலைகள் நடத்தப்பட்டிருப்பது என்பது கொடூரமானது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானது.
                மேற்கு வாங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததிலிருந்து  இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள் என திட்டமிட்ட முறையில் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் அல்லது  கொலை செய்யப்படுகிறார்கள் என்பது மம்தா பானர்ஜியின் இரக்கமற்ற ஈனச்செயலைத் தான் காட்டுகிறது. அந்த மாநிலத்தில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை என்பது, இந்த இரு தலைவர்களையும் சேர்த்து  58 ஆக உயர்ந்திருப்பது என்பது மம்தாவின் ஆட்சியின் இலட்சணத்தைத் தான் காட்டுகிறது.
                மத்திய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று வெற்றிகரமாக நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                இத்தகைய வன்முறை அரசியலையும் பயங்கரவாத அரசியலையும் எதிர்த்து நாடுமுழுவதும் உள்ள நல்லவர்கள் - நல்லிதயம் படைத்தவர்கள் ஓர் அணியில் அணி திரளவேண்டும்.

கருத்துகள் இல்லை: