செவ்வாய், 11 அக்டோபர், 2011

புதுச்சேரி மந்திரியை காணவில்லை...!

''அய்யா... எங்க ஊரு மந்திரிய காணளிங்கய்யா...''
''யோவ்... இது போஸ்ட் ஆபிஸ்யா.. போலீஸ் ஸ்டேஷன்ல போய் 
   சொல்லுயா...''
'' ஓ... சாரி...சாரி... சந்தோசத்துல எங்க சொல்லுறதுன்னே     
    மறந்துபோச்சிங்கைய்யா...''
             இப்படித் தான் பாண்டிச்சேரியில் இருக்கும்  காங்கிரஸ் கட்சிக்காரங்களும் அதிமுக கட்சிக்காரங்களும் கடந்த பத்து நாட்களாக ரொம்ப சந்தோசத்துல இருக்காங்க...
             ஏன்னா... புதுவை காமராசர் ரங்கசாமி எதுல மாட்டுவார்னு எதிர்பாத்துகிட்டே இருந்தாங்களா... எலிப்பொறியில தானே போய் மாட்டிகிட்ட
பெருச்சாலி மாதிரி எங்க அண்ண கல்யாணசுந்தரம் வகையா மாட்டிக்கிட்டாருங்க.. 
            அவரு ஒன்னும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்... இப்படி எதிலும் மாட்டலீங்க .. பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதறது தப்புங்களா...பத்தாம் வகுப்பு தனித் தேர்வு பத்து நாளுக்கு முன்னாடி நடந்துச்சிங்க.. அதுல அறிவியல்.. சமூக அறிவியல் .. இந்த ரெண்டேரெண்டு பாடத்தை தாங்க அவர் எழுத இருந்தாரு... இன்னா ஒன்னு.. அத இவரு எழுதலைங்க.. வேற ஒரு பையன் இவருக்காக எழுதனாங்க...அதுவும் எதுக்குன்னா.. இவரு கல்வி அமைச்சருங்களா... ரொம்போ பிசீங்களா... அதனால இவரு போய் தேர்வு எழுதமுடியளைங்க... ஒரு கல்வி அமைச்சரு இதைக்கூட செய்யக்கூடாதுங்களா... இதப்போய் தப்புன்னு சொல்றாங்க படுபாவிப் பசங்க...
             எங்க அண்ணன் எப்பவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாம் வகுப்பு எழுதுனாருங்க.. ஆனா அதுல ரெண்டு பாடத்துல பெயில் ஆயிட்டாருங்க... அதுக்காக அவர முட்டாள்ன்னு  நெனச்சிடாதீங்க.. ரொம்ப பெரிய புத்திசாலி தானுங்க... ரொம்ப நல்லா படிச்சவருங்க...
              ஆனா அவரு அம்புட்டு படிப்பு படிக்கலனாலும் தன்னுடைய திறமையினாலும், புத்திசாலித்தனத்தினாலும் தாங்க அவரு ஒரு தொழிலதிபரா உயர்ந்தாரு.... அப்படி என்ன தொழில செயதாருன்னு நீங்க கேட்கறது என் காதுல விழுதுங்க... சொல்லுறேன் எழுதிகோங்க..
            முதல்ல அவரு செய்தது ''ரௌடி தொழில்'' தானுங்க.. அதுக்கு இவர மாதிரியே இருக்கிற புத்திசாலிப் பசங்கள செத்து வெச்சிக்கிடாருங்க... அமோகமா தொழில் நடந்ததும்...அடுத்து ''கட்டப்பஞ்சாயத்து'' தொழில்ல ஈடுபட ஆரம்பித்தாருங்க... அதிலேயும் நல்ல வருமானங்க.. 
               இப்படி நல்ல வளர்ச்சி ஆனதும், மது பாட்டில் கடத்தல், வீடு - நிலம் அபகரிப்பு... இப்படியெல்லாம் செய்து படிப்படியா உயந்துகிட்டே போனாருங்க... அப்புறம்.... தன் கூட இருக்கிற ரௌடிங்க  கூட்டத்துக்கு ''மனித உரிமைகள்  கழகம்'' - ன்னு பேரை வெச்சி ''அதிகாரப்பூர்வமா'' ரௌடி தொழில நடத்தினாருங்க...  . பாரதீய ஜனதா கட்சியில சேர்ந்து தேர்தல வேற நின்னாருங்க எங்க அண்ணன். ஆனா ஜெயிக்கலிங்க..
               அதுக்கப்புறமா.. போலீஸ்காரங்க கூட நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால போலீஸ்காரங்கள கையில போட்டுக்கிட்டு பொண்ணுங்கள வெச்சி ''பாலியியல் தொழில்'' செய்தார்ன்னா  பாத்துக்கோங்களேன். அவ்வளவு நல்லவருங்க எங்க அண்ணன்... இப்படி தான், அவரு ஒரு பெரிய ''தொழிலதிபராக''  வளர்ந்து  பல்வேறு ''சமூக நலப்பணி''களையும்    செய்துக்கிட்டு வர்ராருங்க.... ''மக்கள் சேவகர்'' ன்னு  பட்டத்தைக்கூட அவரா தான் வெச்சிக்கிடாருங்க.....
               இடையல சட்டமன்றத் தேர்தல் வந்ததா.. ஏற்கனவே காலாப்பட்டு தொகுதியில அண்ணனோட ''தொழில்'' ரொம்ப விஸ்தாரமா.. லாபகரமா நடக்குதுங்களா.... நல்ல பிரபலமான பிரமுகரா ஆயிட்டாருங்க... ரங்கசாமி வேற புது கட்சி ஆரம்பிச்சாரா.. அண்ணனும் அப்படியே அதுல போய் ஒட்டிகிட்டாருங்க..  அதுக்கு தகுந்த மாதிரி வீணாப்போன காங்கிரஸ் கட்சி சார்புல ஷாஜகான்னு ஒரு மூதேவிய நிக்க வெச்சாங்கங்க... அவரு பேருல மக்களுக்கு பெரிய அதிருப்திங்க... ஏன்னா.. எலக்சனுக்கு எலக்சன் தானுங்க அவரு தொகுதி பக்கமே வருவாரு... அதனால தான்  காலாபேட்டு ஜெனங்களும் அந்த மூதேவிக்கு இந்த மூதேவி பரவா இல்லைன்னு.. இந்த மூதேவிய ஓட்டு   போட்டு   தேர்ந்தேடுத்தாங்கங்க..
              எப்பவுமே பாண்டிச்சேரி மக்கள் நல்லவங்களுக்கு ஓட்டு போடமாட்டங்கங்க.. மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சாராய வியாபாரி, ஆள் கடத்தறவன், வழிப்பறி செய்யறவன், கட்டப்பஞ்சாயத்து செய்யறவன்.... இப்படிப்பட்டவங்கள தான் இந்த மக்கள் தேர்ந்தேடுப்பாங்கங்க...
                 அப்படி ஜெயிச்சவரு தான் எங்க அண்ணன் கல்யாணசுந்தரம்... ரங்கசாமிக்கும் தனியா கட்சி நடத்துவதற்கு,  ஆட்சி நடத்துவதற்கும் இப்படிப்பட்ட ஆளு தான் தேவை.. ஒரு மந்திரி பதவியைக் கொடுத்து பக்கத்துலேயே வெச்சிகிட்டாருங்க...
                   ஒரு அமைச்சரு.. அதுவும் ஒரு கல்வி அமைச்சரு... பத்தாவது கூட தாண்டலன்னா கேவலம்ன்னு நெனச்சி தான் எங்க அண்ணன் ரொம்ப திட்டம் போட்டு இந்த திருவிளையாடல நடத்தினாருங்க... அண்ணன் வரலாற்றிலேயே ''தனக்காக'' தானே திட்டம் போட்டு செய்த ஆள்மாறாட்ட திருவிளையாடளுங்க இது... கடைசியில வகையா மாட்டிகிட்டாருங்க... விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி ஆள்மாறாட்டம் நடந்திருப்பதை உறுதி செய்து காவல் துறையில் புகார் செய்த பிறகு, அண்ணன் பேர்ல எட்டு வழக்குகள் பதிவாகியிருக்குதுங்க.. தமிழ்நாடு போலீஸ் புதுவையில  எங்க அண்ணன் பாத்துபோகலாம்னு வந்து தேடுறாங்கன்னு  தெரிஞ்ச  பிறகு  தான்  எங்க அண்ணன காணலைங்க..
                   ரங்கசாமி வீட்டுலேயும், சட்டமன்றத்திலேயும் எங்க அண்ணன் ஒளிஞ்சிகிட்டிருந்தாருன்னு சொல்லுராங்கங்க... இதெல்லாம் நான் தான்  சொன்னேன்னு எங்க அண்ணன்கிட்ட சொல்லிடாதீங்க அய்யா...

2 கருத்துகள்:

பூங்குழலி சொன்னது…

மந்திரியை காணலைன்னா ஊருக்கு நல்லது தானே

பெயரில்லா சொன்னது…

இது தான் பதிவு. பதிவு சூப்பர் தலைவா.