

அதுமட்டுமல்லாமல், இவ்வளவு குறைவான பணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாளை எப்படி கழிக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அந்த வரைவு ஓலையுடன் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.
கிராமப்புறத்தில் வாசிப்போர்க்கு ரூ. 25 போதுமானது என்று மத்திய திட்டக்குழு உச்சநீதிமன்றத்திற்கு கொடுத்த வாக்குமூலம் வாயிலாக தாங்கள் சொல்லியிருப்பது என்பது அர்த்தமற்றது..... நியாயமற்றது....நடைமுறைக்கு ஒத்துவராதது ஆகும். எனவே உச்சநீதிமன்றத்தில் கொடுத்த அந்த வாக்குமூலத்தை திரும்பப்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிராமப்புறத்தில் வாசிப்போர்க்கு ரூ. 25 போதுமானது என்று மத்திய திட்டக்குழு உச்சநீதிமன்றத்திற்கு கொடுத்த வாக்குமூலம் வாயிலாக தாங்கள் சொல்லியிருப்பது என்பது அர்த்தமற்றது..... நியாயமற்றது....நடைமுறைக்கு ஒத்துவராதது ஆகும். எனவே உச்சநீதிமன்றத்தில் கொடுத்த அந்த வாக்குமூலத்தை திரும்பப்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாறுமாறாகப் போகும் அரசை, இது போல் குடிமக்கள் தட்டிக்கேட்பது என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
அதேப்போல், சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை பேரவையின் உறுப்பினர்களான அருணா ராய் மற்றும் ஹர்ஷ் மாந்தர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில், வறுமைக்கோடு பற்றிக் கொடுத்த வாக்குமூலத்தை, அதை கொடுத்த திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியாவே திரும்பப்பெறவேண்டும் அல்லது துணைத்தலைவர் பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் கோரியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக