ஞாயிறு, 7 ஜூலை, 2013

ஒரு மனசாட்சி உள்ள அமெரிக்கரின் குரல் - நோம் சாம்ஸ்கி

                  பின்லேடன் கொலை என்பது திட்டமிட்ட ஒரு படுகொலை என்பதும் , அடிப்படையான சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களை அப்பட்ட மாக  மீறிய செயல் என்பதும் தெளி வானது. எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் இருந்த ஒருவரை சுமார் 80 கமாண்டோக்கள் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவரது மனைவி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

                சமூகத்தில் சட்டத்திற்கு குறைந்த பட்ச மரியாதையாவது தரப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதியின் முன்பு விசாரணைக்கு நிறுத் தப்பட வேண்டும். 2002 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான எப்பிஐ-யின் தலைவர் ராபர்ட் முல் லர் தீவிரமான புலன் விசாரணைக்கு பின்பு, அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல் ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்றும், யுஏஇ மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்று நம்புவ தாக மட்டுமே கூறினார்.

                இதற்கு 8 மாதங்களுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில்தான் பின்லே டன் தங்கியிருப்பதாக ஆதாரத்துடன் தகவல் அளித்தால், அவரை ஒப்ப டைப்பதாக தாலிபான்கள் வெளிப் படையாகவே தெரிவித்தனர். ஏப்ரல் 2002ல் நம்மால் நம்பப்பட்ட ஒரு விஷயம் குறித்து அப்போது எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால், பாரக் ஒபாமா தன்னுடைய வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் மிகவும் சாதாரணமாக பொய் சொல்கிறார், “2001 செப்டம்பர் 9ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் லேடன்தான் காரணம் என்பதை நாம் உடனடியாக தெரிந்து கொண்டோம்” என்று.

                அபோதாபாத்தில் பின்லேடனை ஒளித்து வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் குறித்து வாஷிங்டனின் கோபம் பற்றி ஊடகங்களில் பெருமளவு விவாதிக் கப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் தங்களது நாட்டுக்குள் அமெ ரிக்க படையினர் அத்துமீறி நுழைந்து ஒரு அரசியல் படுகொலையை நிகழ் த்தியிருப்பது குறித்து பாகிஸ்தானின் கோபம் பற்றி யாரும் கவலைப்படு வதாக தெரியவில்லை. அமெரிக்கா வுக்கு எதிரான ஆவேசம் என்பது பாகிஸ்தானில் ஏற்கெனவே பெரு மளவு அதிகரித்துள்ளது. இப்போது நடந்துள்ள செயல் அதை மேலும் அதிகமாக்கும். பின்லேடனின் உடலை கடலில் தூக்கி எறிந்தது குறித்து ஆத்திரமும் கோபமும் முஸ்லிம் உலகத்தில் ஏற்பட்டுள்ளது.

                  இராக் நாட்டைச் சேர்ந்த கமாண்டோ படையினர் ஜார்ஜ் டபிள்யு புஷ் வீட்டுக்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, உடலை தூக்கி அட் லாண்டா கடலில் வீசிவிட்டு போனால் நாம் எவ்வாறு இதை எதிர்கொள் வோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்கு இடமின்றி பின்லேடனின் குற்றம் சித்தரிக்கப்படுகிறது.

                கியூப விமானத்தை குண்டு வைத்து தகர்த்த போட்ச், புளோரிடா வில் அமைதியாக மரணமடைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துறை முக பயங்கரவாதத்தில் தொடர்பு டையவர்களும், இதுமாதிரியே நடத் தப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா அத்துமீறி நடத்திய படுகொலைகள் குறித்து புஷ்சின் கவனத்திற்கு யாருமே கொண்டு வரவில்லை போலிருக் கிறது.

                ஜெர்னிமோ திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட செயலின்மூலம் ஏகாதிபத்திய ஆதிக்க மனநிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. மேற்கத்திய சமூகம் முழுவதும் பின் லேடன் மரணம் பெருமளவு கொண் டாடப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட முந்தைய மரணங்கள் புனிதப்படுத் தப்படுகின்றன.

சுருக்கமாக சொல்வதானால் இவ் விஷயத்தில் அடிப்படையான, எளி மையான உண்மைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதுமில்லை; மதிக்கப்படுவதுமில்லை என்பது தான் உண்மை.

- நோம் சாம்ஸ்கி எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்

கட்டுரையாளர்: எம்ஐடி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக அரசியல் விஷயங்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர் 

நன்றி: தீக்கதிர்/ 11.05.2011                             

கருத்துகள் இல்லை: