ஞாயிறு, 23 நவம்பர், 2014

கியூபா சர்வாதிகார நாடு - பொய் பிரச்சாரம்


  சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்....!           
கியூபாவில் வாழும் புரட்சியாளன் சே குவேராவின் 
புதல்வியுடனான பேட்டி ...!               

கேள்வி : 
                 மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : 
    மேற்குலகில் இருப்பவர்களுக்கு ''சர்வாதிகாரம்'' என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்கமாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு மக்கள்  அதிகமாக படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.
                எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக்கல்வியை அறிமுகப்படுத்தமாட்டான்.... எப்படிப்பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும், இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்....? எப்படிப்பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்....? கியூபாவில் அதுதான் நடக்கிறது.
        ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு - இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப்படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்...?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:

‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT
http://rt.com/news/207111-west-dictatorship-cuba-guevara/

கருத்துகள் இல்லை: