ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மோடியுடன் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நெத்தியடி....!

              

 
      எப்படியாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி மக்களை தன்  பக்கம் இழுத்து ஓட்டுக்களை பெறுவதற்கு வகைவகையான தில்லுமுல்லுகளை அரங்கேற்றிவருகிறார். ஏற்கனவே இந்தி நடிகர் அமிதாப்பச்சன் என்றோ பேசிய பழைய வீடியோவை தூசுத்தட்டி எடுத்து அதில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசுவது போல் பதிவு செய்து வெளியிட்டு அமிதாப்பச்சன் கையாலேயே மோடி குட்டு வாங்கியதை நாடு இப்போது தான் பார்த்தது. அதற்குள் இன்னொரு தில்லுமுல்லை அரங்கேற்றியிருக்கிறார். சமீபத்தில் ''இளந்தாமரை  மாநாட்டிற்கு'' கலந்து கொள்வதற்காக மோடி திருச்சி வந்தபோது அவரை வரவேற்கும் பெரும்பாலான போஸ்டர்களிலும், டிஜிட்டல் பேனர்களிலும் மோடியுடன் ரஜினிகாந்த் படத்தையும் இணைத்து போட்டிருந்தார்கள். இதைப்பார்த்த இளைஞர்கள் - இரசிகர்கள்  முகம் சுளித்தனர். ஆனால் இந்த போஸ்டர் குறித்து ரஜினிகாந்திடமிருந்து மட்டும் ஏனோ எந்தவிதமான கருத்தும் வரவில்லை. வழக்கம் போல் மவுனம் தான்.
         ஆனால் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது நடிகர் கமல்ஹாசன், திருச்சியில் நடைபெற்ற நரேந்திர மோடியின் கூட்டத்தின் போது ரஜினியின் போஸ்டரைப் பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் நான் அப்படியில்லை. அதேப்போல் என்னுடைய போஸ்டரை பயன்படுத்த நிச்சயமாக அனுமதிக்கமாட்டேன் என்று ஆவேசமாக நெத்தியடிக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே காவிக்கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கமல்ஹாசனின் துணிச்சலை  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
          


கருத்துகள் இல்லை: