புதன், 28 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்புச் சட்டம் - சோனியா காந்தியின் ''முதலைக் கண்ணீர்''...!














         ஏழை மக்கள் இரவில் பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத் தான் உணவு பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படுகிறது என்று ''அன்னை'' சோனியா நேற்று முன் தினம் ரொம்ப உருக்கமாக அந்த மசோதாவைப் பற்றி பேசும் போதே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அப்பப்பா ஏழைகள் மீது என்ன அவ்வளவு அக்கறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு...? அந்த ஏழைகளிடம் தான் ஒட்டிய வயிறும் ஓட்டும் இருக்கிறது. ஏழைகளின் கையையும், வாயையும் கட்டிப்போட்டுவிட்டு அவர்கள் எதிரிலேயே உணவை ''பாதுகாப்பாக'' வைத்திருப்பது தான் இந்த சட்டம் என்பது அந்த மக்களுக்கு தெரியாதா என்ன...? நிச்சயம் தெரியும்.

கருத்துகள் இல்லை: