ஞாயிறு, 20 மார்ச், 2011

ஊழல் பேர்வழிகளே! இளம் தலைமுறையினரை வீணாக்கி விடாதீர்கள்..






எதிர்வரும் தமிழக - புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தலில் பதினெட்டு வயது நிரம்பிய நம் வீட்டு இளம்தலைமுறையினர் முதல்முறையாக அல்லது இரண்டாவது முறையாக
வாக்களிக்க உள்ளனர். ஊழல் பேர்வழிகளே.. ஏற்கனவே மக்களுக்கு அவர்களின் ஓட்டுக்காக பணத்தையும் , புடவை-மூக்குத்தி என பல்வேறு இலவசங்களையும் அள்ளிவீசியும், மது பாட்டில்களையும் பிரியாணி பொட்டலங்களையும் அள்ளிக்கொடுத்தும் வாக்காளர்களின் மனதை மாசுபடுத்தி வீணாக்கி வைத்திருக்கிறீர்கள். ஓட்டுக்காக அதே அஸ்திரத்தை புதிய வாக்காளர்களான இன்றைய இளம் தலைமுறையினர் மீது ஏவி அவர்களையும் வீணாக்கி விடாதீர்கள். அவர்கள் நீங்கள் தரும் பணத்தையும், இலவசங்களையும், மது பாட்டில் மற்றும் பிரியாணி பொட்டலங்களையும் எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை. நீங்கள் ஆட்சிக்குவந்தால் திரும்பத்திரும்ப மாறிமாறி ஊழல் செய்யாமல் நல்லாட்சித் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் அவர்கள் வாக்களிக்கிறார்கள். நாம் தான் கல்விக் கட்டணக் கொள்ளையில் சிக்கி கடன் பட்டு நினைத்ததை படித்தோம் அல்லது வசதியின்மை காரணமாக நினைத்த படிப்பை படிக்கமுடியாமல் கிடைத்ததை படித்தோம். ஆனால் நம் தம்பி - தங்கைகளுக்கு கட்டணக் கொள்ளையில் சிக்காத கல்வி கிடைக்கச் செய்வீர்கள் என்கிற எதிர்பார்ப்போடு தான் வாக்களிகிறார்கள். நீங்கள் தரும் காசுக்காக அல்ல.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் அல்லது படித்து முடித்த இளம் தலைமுறையினர் தனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் நல்ல அரசை எதிர்பார்த்து தான் அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்கிறார்கள். நீங்கள் தரும் காசுக்காக அல்ல.
காசையும், இலவசங்களையும், மது-பிரியாணிப் பொட்டலங்களையும் கொடுத்து ஓட்டுக்களை பொறுக்கி தொடர்ந்து ஊழல்கள் செய்து பணம் சம்பாதிப்பதற்காகவே ஓட்டுப் பொறுக்கிகளாகவே வாழ்ந்து ஆட்சி செய்யத் துடிக்கிறீர்கள். நீங்கள் கொள்ளையடிப்பதற்காக இன்றைய இளம் தலைமுறையினரை பலியாக்கிவிடாதீர்கள். நீங்கள் கொள்ளையடித்த ஊழல் பணத்தை தேர்தலின் போது ஓட்டுக்காக நீங்கள் தரும் காசையும் இலவசத்தையும் வெட்கப்படாமல் வாங்கிக்கொண்டு ஒருவித மயக்கத்தில் உங்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் பழைய தலைமுறையினரை (முயற்சி செய்தும்) இனி திருத்த முடியாது.
ஆனால் பல்வேறு கனவுகளோடு படித்துக் கொண்டிருக்கும் அல்லது படித்து முடித்து வேலைக்காக அலையும் இளம் தலைமுறையினரை உங்கள் வலையில் சிக்கவைத்து அவர்களது எதிர்காலக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிடாதீர்கள்.

3 கருத்துகள்:

S.Raman, Vellore சொன்னது…

Where is the matter comrade,
It is not just election, even the leaking of question papers corrupts.
a person who spends lakhs to get one, will do what? He will spoil his own organization

இவள் பாரதி சொன்னது…

ungal karuthukal serivaaka ulllathu.. vaazthukal thozare... thodaratum um pani...

puduvairamji.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி.. அடிக்கடி என் வலைப்பூவை படித்து செழுமை படுத்துங்கள்..