செவ்வாய், 22 மார்ச், 2011

இன்குலாப் ஜிந்தாபாத்.. 80 ஆண்டுகள்














வீரவணக்கம்

'' ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோமென்று '' - இது நாம் எதிர்காலத்தில் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிடுவோம் என்ற அன்றைய இளைஞன் பாரதியின் கனவு..

"பாலுக்காக அழும் குழந்தை
கல்விக்காக ஏங்கும் சிறுவன்
வேலைக்காக அலையும் இளைஞன்
வறுமையில் வாடும் தாய் -
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா" - அனைவருக்கும் உணவு.. அனைவருக்கும் கல்வி.. படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு - இவைகளை பெற்ற இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா என்று அன்றைய இளைஞன் மாவீரன் பகத் சிங் கண்ட கனவு..

1931- ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாளன்று மாலை 7.04 மணிக்கு தூக்குமேடையில் " இன்குலாப் ஜிந்தாபாத் " என்கிற இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் புரட்சி முழக்கம் கடைசியாக ஒலித்து இன்றைக்கு 80 ஆண்டுகள் ஆகின்றன.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக.. மாவீரர்கள் பகத் சிங் , ராஜகுரு, சுகதேவ் போன்ற இளைஞர்கள் தன் சுவாசக் காற்றை தியாகம் செய்த
நாள் மார்ச் 23.. இன்று அவர்களின் நினைவைப் போற்றி அவர்கள் விட்டுச் சென்ற உண்மையான சுதந்திர இந்தியாவிற்கான போராட்டத்தை நாமும் தொடர்வோம்.
"இன்குலாப் ஜிந்தாபாத்"

கருத்துகள் இல்லை: