திங்கள், 7 மார்ச், 2011

உலக மகளிரை வாழ்த்துவோம்...



















உலகளவில் மகளிர்க்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கடந்த நூறாண்டுகளாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு, இன்றைக்கு 101-வது மகளிர் தினத்தை வழக்கமான சடங்குகளுடனும் சம்பிரதாயங்களுடனும் மிகுந்த உற்சாகங்களுடன் கொண்டாடப்படுகிறது..
இன்று பல இடங்களில், பணிபுரியும் பெண்களும் குழு நடத்தும் பெண்களும் வண்ணப்புத்தாடைகள் உடுத்திகொண்டு , கோலப்போட்டி, சமையல் போட்டி என கொண்டாட்டம் களைகட்டுகிறது. மகளிர் தினம் என்பது கொண்டாட்டமல்ல... அது ஒரு போராட்டம் என்பதை நம் மகளிர் இன்னும் உணரவில்லையே என்பது வேதனையாகத்தான் இருக்கிறது.
பெண்கள் தாங்கள் பிறந்த காலம்தொட்டே போலியான பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களாலும், மனிதனின் படைப்புகளான மதம், சாதி மற்றும் கடவுள் போன்றவைகளாலும், தேவையற்ற மூடபழக்கங்களாலும், வீணான சம்பிரதாயங்களாலும், அர்த்தமற்ற சடங்குகளாலும், இவைகளை போதிக்கும் கல்விகளாலும், சமூகத்தாலும், ஊடகங்களாலும் உரிமைகளை இழந்த அடிமைகளாய் பன்படுத்தப்பட்டுவிடுகிறார்கள். மேலே சொன்ன அத்தனையும்
பெண்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுக்கின்ற பாறைகளாய் குறுக்கே நிற்கின்றன. அவைகள் ஒழிந்தால் தான் பெண்களுக்கான உண்மையான உரிமைகள் கிடைக்கும்.. அந்த அடிமை விலங்கொடித்து உரிமைகளை பெறுவதற்கான போராட்டமாகவே இந்த நாளை நாம் பார்க்கவேண்டும்..
# பெண்கள் பிறப்பதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
# பெண்கள் படிப்பதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
# பெண்கள் வேலைக்கு செல்வதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
# பெண்கள் வயிறார உணவருந்துவதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் மாறவேண்டும்..
# பெண்கள் சுதந்திரமாய் கருத்துக்களை சொல்வதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் மாறவேண்டும்..
# நச்சரிக்கும் வீட்டு வேலைகளை ஆணும் பெண்ணும் சமமாய் பகிர்ந்து செய்யும் சம உரிமைக்கான போராட்டமாக இந்த நாள் மாறவேண்டும்..
# 33% அல்ல 50% பெண்கள் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகிய
சட்டமியற்றும் இடங்களில் அமர்வதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
சம உரிமையும், சம வாய்ப்பும், பெண்கள் முன்னேற்றமுமே மகளிர் தினத்தன்று நாம் உரக்க எழுப்பவேண்டிய கோரிக்கைகளாகும்..
பெண்களை போற்றுவோம்.. பெண்களை வாழ்த்துவோம்..
வாழ்க மகளிர் தினம்..

3 கருத்துகள்:

Pushkarani சொன்னது…

Porattam thane pengalin vaazhkkai muzhuvathuvum
Intha oru naalai kondattathudan poraadi magilattume
Penmaiyai potrum ungal perunthanmaikku nandri

Endrendrum anbudan
Pushkarani

puduvairamji.blogspot.com சொன்னது…

பெண்கள் வாழ்க்கைக்கான போராட்டமாக இல்லாமல் பெண்கள் உரிமைக்கான போராட்டமாக மாறவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

simmakuralon சொன்னது…

arivujeevi nanbarey,thangalin idugaileye adhhrkana badulum irukirathu.kondattathai kindal adithu
irukireerkaley ondrai yositheerkalaa
pengal piranthadhinaalthan vizha kondadukirarkal./ padithathinaalthan
panipuriya vandullargal panipuriyavandadhinaldhan urimaikkaka
poradugirargal. ungal aadhangam???
oralavu niraiveriyullathe adharkuthan
indha kondattam ellam.neenda payanithiidaye oru siru ilaiparalai
poley. vasai paaduthlai viduthu
indha alavu matrathaiyavathu inidhaka erpom.