திங்கள், 2 நவம்பர், 2015

ஜெயலலிதா பிரபலப்படுத்திய சூப்பர் ஹிட் பாடல்....!


            இன்றைக்கு தமிழகத்தில் முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், மொபைல் ரிங்டோனிலும்  ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல், நம்ப தோழர்.கோவன் பாடிய ''ஊருக்கு ஊரு சாராயம்...'' என்ற மதுவிலக்கு பாடல் தான். இந்த பாட்டை பாடியதற்கு தான் ஜெயலலிதாவிற்கு கோபம் வந்து, கோவனை பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார். 
       இதற்கு முன்பு இந்த பாட்டை யாரும் விரும்பிக்கேட்டதாக தெரியவில்லை. தோழர்.கோவன் சார்ந்த கலைக்குழுவில் மட்டும் தமிழகத்தில் ஆங்காங்கே பாடப்பட்டு வந்தது. சினிமா மாதிரி அப்படி ஒன்றும் ''ஹிட் சாங்கும்'' கிடையாது. முக்கல் முனகல் இருக்காது. சிந்திக்கத் தூண்டும் கருத்து இருக்கும். அது யாருக்கு வேண்டும். அதனால இந்த பாடலை கோவன் கைது செய்யப்படும் வரையில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்லலாம். 
          ஆனால் அந்த பாட்டை எப்படியோ  அம்மையார் கேட்டுவிட, அம்மையாருக்கு கடும்கோபம் வந்துவிட்டது. விளைவு - கோவன் கைது செய்யப்பட்டார். கோவனின் கைது செய்தி காட்டுத்தீயாய் தமிழகம் முழுதும் பரவ,  கூடவே அம்மையாருக்கு கோபத்தைத் தூண்டிய அந்தப் பாடலும் காட்டுத்தீயாய் ஒளி - ஒலி வடிவங்களில் பரவி மக்களின் கவனத்தை ஈர்த்து, கருத்தை ஈர்த்து சூப்பர் ஹிட் பாடலாக ''டாப் 10'' இல் பிடித்த பாடலாக மாறியிருக்கிறது. விளம்பரச்செலவே கொஞ்சம் கூட இல்லாமல் இந்தப் பாடலை மக்களிடம் பிரபலப்படுத்திய   பெருமை ஜெயலலிதாவையே சாரும். அதற்காக தற்போது கொடநாட்டில் வசிக்கும் போயஸ்கார்டன் அம்மையாரை  கோவனின் அந்தப்பாடலைப் பாடியே ''அர்ச்சனை'' செய்யலாம்.

கருத்துகள் இல்லை: